6 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி மாவட்டங்-்களில் ஒரு சில இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யும்.ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர், அரியலூர் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்ககளில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.
கருத்துகள்
கருத்துரையிடுக